செய்திகள்
சந்தோஷ் விநாயக்

டீ கப்புகள் மூலம் மேஜை விளக்கு உருவாக்கி அசத்திய சிறுவன்

Published On 2021-06-12 19:09 IST   |   Update On 2021-06-12 19:09:00 IST
சிறுவயதிலேயே வீட்டில் உபயோகம் இல்லாத பொருட்களை, பயன்பாட்டிற்கு உரியதாகவும், அலங்கார சாதனமாகவும் தயாரிக்கும் சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கறம்பக்குடி:

ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியைச் சேர்ந்த கண்ணன் - சுவேதா தம்பதியின் மகன் சந்தோஷ் விநாயக் (வயது 8). 3-ம் வகுப்பு படித்து வருகிறான். 4 வயதிலிருந்தே ஓவியம் வரைவதிலும், வீட்டில் உபயோகமற்ற பொருட்களை கொண்டு வீட்டு அலங்கார பொருட்களை உருவாக்குவதிலும் ஆர்வமாக இருப்பான். பள்ளி விடுமுறை காரணமாக கறம்பக்குடியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியுள்ள சிறுவன் சந்தோஷ் விநாயக் டீ கப்புகள் மற்றும் பழைய சேலை, சுடிதார்களில் உள்ள சரிகைகளை வைத்து பேட்டரி மேஜை விளக்கை உருவாக்கி உள்ளான். சிறுவயதிலேயே வீட்டில் உபயோகம் இல்லாத பொருட்களை, பயன்பாட்டிற்கு உரியதாகவும், அலங்கார சாதனமாகவும் தயாரிக்கும் சிறுவனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News