செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published On 2021-06-06 07:36 GMT   |   Update On 2021-06-06 07:36 GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை: 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 9 வயதான பெண் சிங்கம் உயிரிழந்தது. மேலும் தொற்று பாதிக்கப்பட்ட 8 சிங்கங்களில் 2 சிங்கங்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 


அங்கு, பேட்டரி கார் மூலம் சென்று சிங்கங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விலங்குகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். 

Tags:    

Similar News