செய்திகள்
கொரோனாவால் இறந்த கடலூர் போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.18 லட்சத்திற்கான காசோலை

கொரோனாவால் இறந்த கடலூர் போலீஸ் ஏட்டு குடும்பத்துக்கு ரூ.18 லட்சத்திற்கான காசோலை

Published On 2021-06-05 21:22 IST   |   Update On 2021-06-05 21:22:00 IST
கொரோனாவால் இறந்த கடலூர் போலீஸ் ஏட்டு குடும்பத்துக்குபோலீசார் ஒரு நாள் சம்பளத்தை திரட்டி ரூ.18 லட்சத்திற்கான காசோலை வழங்கினர்.
கடலூர்:

சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த ராஜ்குமார், கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த விருத்தாசலம் கச்சிராயநத்தம் அரங்கநாயகம் ஆகிய 2 பேரும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து கொரோனாவில் இறந்துபோன 2 போலீஸ் ஏட்டுகளின் குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசார் முதல் போலீஸ் சூப்பிரண்டு வரை தங்களது ஒரு நாள் சம்பளத்தை மனமுவந்து கொடுத்தனர். இத்தொகையை இறந்த 2 பேர் குடும்பத்தினருக்கும் சமமாக பிரித்து வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டார். அதன்பேரில் இறந்த போலீஸ் ஏட்டு அரங்கநாயகம் மனைவி அருள்குமாரியிடம் நேற்று 18 லட்சத்து 18 ஆயிரத்து 446 ரூபாய்க்கான காசோலையை கடலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தனது அலுவலகத்தில் வைத்து வழங்கினார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ரவி உடனிருந்தார்.

Similar News