செய்திகள்
திருட்டு

விருத்தாசலம் அருகே வீட்டில் நகை, பணம் திருட்டு

Published On 2021-06-04 17:27 IST   |   Update On 2021-06-04 17:27:00 IST
விருத்தாசலம் அருகே வீட்டில் நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்மாபுரம்:

விருத்தாசலம் அடுத்த மேற்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 66). சம்பவத்தன்று இவர் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 9 கிராம் தங்கம், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தொியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Similar News