செய்திகள்
கோவிஷீல்டு

சென்னையில் இருந்து கடலூருக்கு 8 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது

Published On 2021-06-04 17:13 IST   |   Update On 2021-06-04 17:13:00 IST
சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 8 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது பொதுமக்கள் பலர் தடுப்பூசி போடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 590 பேர் தடுப்பூசி போட்டு க்கொண்டு உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 840 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 37 ஆயிரத்து 750 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 8 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கப்பட்டது. அதன்படி அவை நேற்று முன்தினம் மாலை கடலூர் சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு வந்தது. தற்போது மாவட்டத்தில் 14 ஆயிரத்து 960 டோஸ் தடுப்பூசி இருப்பு உள்ளது. இதில் 3 ஆயிரத்து 860 டோஸ் கோவாக்சினும், 11 ஆயிரத்து 100 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியும் இருப்பு உள்ளது.

Similar News