செய்திகள்
தற்கொலை

காஞ்சீபுரம் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2021-06-02 16:32 IST   |   Update On 2021-06-02 16:32:00 IST
காஞ்சீபுரம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 23). இவர் சுங்குவார் சத்திரம் அருகே தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். மது பழக்கதுக்கு அடிமையான அவர் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் ஆனந்தனை அந்த வீட்டிலேயே பாட்டியுடன் விட்டுவிட்டு சுங்குவார் சத்திரம் பகுதியில் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். தனது குடி பழக்கத்தால் குடும்பத்தினர் தன்னை பிரிந்து சென்று விட்டதாக மனஉளைச்சளில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆனந்தன் தனது செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் சாக போவதாக பதிவிட்டுள்ளார். நேற்று காலை ஆனந்தனின் உறவினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு மூடியிருந்தது. நீண்ட நேரமாக கதவு தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தார். ஆனந்தன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News