செய்திகள்
விபத்து பலி

கிருஷ்ணகிரியில் சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் பலி

Published On 2021-05-30 12:32 GMT   |   Update On 2021-05-30 12:32 GMT
கிருஷ்ணகிரியில் சாலையை கடக்க முயன்றவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News