செய்திகள்
வழக்கு பதிவு

தேன்கனிக்கோட்டையில் மது கடத்தி வந்த 2 வாலிபர்கள் மீது வழக்கு

Published On 2021-05-29 14:06 GMT   |   Update On 2021-05-29 14:06 GMT
தேன்கனிக்கோட்டையில் மது கடத்தி வந்த 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் புட்டப்பா. இவருடைய மகன் எல்லப்பா வயது (20). அதே பகுதியை சேர்ந்தவர் திருப்பதி என்பவரின் மகன் அப்பு (20). இவர்கள் 2 பேரும் இருசக்கர வாகனத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது தேன்கனிக்கோட்டை போலீசார் வாகன தணிக்கையல் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். பின்னர் வாகனத்தை சோதனை செய்தபோது கர்நாடக மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக மதுபாட்டில்கள் கடத்தி வந்தது ெதரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்கள் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News