செய்திகள்
கருப்பு பூஞ்சை- கோப்புப்படம்

திருவண்ணாமலையில் 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு? - மருத்துவ அதிகாரிகள் விளக்கம்

Published On 2021-05-27 23:38 IST   |   Update On 2021-05-27 23:38:00 IST
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப் பட்ட இருவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர்கள் விளக்கமளித்து உள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாபாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்ட போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம்.

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி உள்ளதாக 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் சைனஸ் பிரச்சினை போன்று தெரிகிறது. கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளது என்றனர்.

Similar News