செய்திகள்
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - போளூரில் கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் பொது சுகாதார துறை சார்பில் 18 வயது முதல் 44 வயதினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதார துறை சார்பில் 18 வயது முதல் 44 வயதினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான மருத்துவ குழுவினர் 18 முதல் 44 வயதினர் 164 பேருக்கும், 45 வயதுக்கும் மேற்பட்ட 62 பேருக்கும் என மொத்தம் 226 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முகாமில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைவாணிகலைமணி, ஆணையாளர் ஆ.சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோரும் முகாமை பார்வையிட்டனர்.
முன்னதாக வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனாவிலிருந்து மீள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சாந்திதமிழ்ச்செல்வன் செய்திருந்தார். முடிவில் வேங்கிக்கால் ஊராட்சி செயலாளர் நாராயணன் நன்றி கூறினார்.
போளூர் பேரூராட்சி மற்றும் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றன. போளூரில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, களம்பூர், கஸ்தம்பாடியில் இலங்கை அகதிகள் முகாம், சோமந்தபுத்தூர், சந்தவாசல், கேளூர், வாழியூர் ஆகிய 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்களை தாசில்தார் சாப்ஜான் தொடங்கி வைத்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயவேல், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 7.இடங்களில் 382 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதில் சில இடங்களில் ஆரணி உதவி கலெக்டர் நாராயணன், போளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சோமந்தபுத்தூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்தும், முக கவசம் அணிவதன் முக்கியம், சமூக இடைவெளி கடைப்பிடித்தலின் பயன் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
மேலும் நலிந்த 3 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் வழங்கினார். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செங்கம் பஸ்நிலையம், மேல்ராவந்தவாடி, மேல்வணக்கம்பாடி, பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அதேபோல புதுப்பாளையம் மருத்துவ வட்டத்திற்குட்பட்ட சி.நம்மியந்தல், ஜப்திகாரியந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு தாலுகா சூசை நகரில் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு தலைமையில் சேத்துப்பட்டு தாசில்தார் பூங்காவனம், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா ஆகியோர் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் ஒதலவாடி, பத்தியாவரம் ஆகிய கிராமங்களில் 228 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதேபோல் பெரணமல்லூர் வட்டாரத்தில் விளாநல்லூர், பூங்குணம், பெரணமல்லூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு துணை சுகாதார புச்சியியல் வல்லுனர் துரைராஜ், விளாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 125 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் போளூர் தாசில்தார் சாப்ஜான் முன்னிலையில் நடைபெற்றது. சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மற்றும் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்கள் 67 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.
இதில் சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதார துறை சார்பில் 18 வயது முதல் 44 வயதினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான மருத்துவ குழுவினர் 18 முதல் 44 வயதினர் 164 பேருக்கும், 45 வயதுக்கும் மேற்பட்ட 62 பேருக்கும் என மொத்தம் 226 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முகாமில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைவாணிகலைமணி, ஆணையாளர் ஆ.சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோரும் முகாமை பார்வையிட்டனர்.
முன்னதாக வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனாவிலிருந்து மீள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சாந்திதமிழ்ச்செல்வன் செய்திருந்தார். முடிவில் வேங்கிக்கால் ஊராட்சி செயலாளர் நாராயணன் நன்றி கூறினார்.
போளூர் பேரூராட்சி மற்றும் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றன. போளூரில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, களம்பூர், கஸ்தம்பாடியில் இலங்கை அகதிகள் முகாம், சோமந்தபுத்தூர், சந்தவாசல், கேளூர், வாழியூர் ஆகிய 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்களை தாசில்தார் சாப்ஜான் தொடங்கி வைத்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயவேல், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 7.இடங்களில் 382 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதில் சில இடங்களில் ஆரணி உதவி கலெக்டர் நாராயணன், போளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சோமந்தபுத்தூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்தும், முக கவசம் அணிவதன் முக்கியம், சமூக இடைவெளி கடைப்பிடித்தலின் பயன் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
மேலும் நலிந்த 3 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் வழங்கினார். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செங்கம் பஸ்நிலையம், மேல்ராவந்தவாடி, மேல்வணக்கம்பாடி, பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அதேபோல புதுப்பாளையம் மருத்துவ வட்டத்திற்குட்பட்ட சி.நம்மியந்தல், ஜப்திகாரியந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு தாலுகா சூசை நகரில் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு தலைமையில் சேத்துப்பட்டு தாசில்தார் பூங்காவனம், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா ஆகியோர் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் ஒதலவாடி, பத்தியாவரம் ஆகிய கிராமங்களில் 228 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதேபோல் பெரணமல்லூர் வட்டாரத்தில் விளாநல்லூர், பூங்குணம், பெரணமல்லூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு துணை சுகாதார புச்சியியல் வல்லுனர் துரைராஜ், விளாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 125 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் போளூர் தாசில்தார் சாப்ஜான் முன்னிலையில் நடைபெற்றது. சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மற்றும் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்கள் 67 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.
இதில் சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.