செய்திகள்
நீலகிரியில் கருப்பு பூஞ்சை பாதிப்பு இல்லை- கலெக்டர் தகவல்
கொரோனா உறுதியாகி லேசான அறிகுறிகளுடன் உள்ள 1,400 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் போதுமான படுக்கை வசதிகள், வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரியில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர், கூடலூர் அரசு மருத்துவமனைகள் உள்பட 14 மையங்களில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றன.
கொரோனா உறுதியாகி லேசான அறிகுறிகளுடன் உள்ள 1,400 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தினமும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஊழியர்கள் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்கள். நீலகிரியில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் போதுமான படுக்கை வசதிகள், வீடுகளில் தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரியில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர், கூடலூர் அரசு மருத்துவமனைகள் உள்பட 14 மையங்களில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றன.
கொரோனா உறுதியாகி லேசான அறிகுறிகளுடன் உள்ள 1,400 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை தினமும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஊழியர்கள் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்கள். நீலகிரியில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.