செய்திகள்
செங்கம், புதுப்பாளையத்தில் 42 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி
செங்கம் பகுதியில் நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
செங்கம்:
செங்கம் பகுதியில் நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதேபோல செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் மருத்துவ வட்டத்தில் 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள ஊரடங்கிற்கு ஒத்துழைத்து வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டாம் எனவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், முககவசம் அணிந்து கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டுமென சுகாதாரத்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேபோல போளூர் பேரூராட்சி பகுதியில் 6 பேருக்கும், சுற்றி உள்ள கிராமங்களில் 16 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் 22 பேரையும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வட்டார மருத்துவர் டாக்டர் சுந்தர் அனுப்பி வைத்தார்.
செங்கம் பகுதியில் நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதேபோல செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் மருத்துவ வட்டத்தில் 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள ஊரடங்கிற்கு ஒத்துழைத்து வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டாம் எனவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், முககவசம் அணிந்து கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டுமென சுகாதாரத்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேபோல போளூர் பேரூராட்சி பகுதியில் 6 பேருக்கும், சுற்றி உள்ள கிராமங்களில் 16 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் 22 பேரையும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வட்டார மருத்துவர் டாக்டர் சுந்தர் அனுப்பி வைத்தார்.