செய்திகள்
நீலகிரிக்கு 7,600 கொரோனா தடுப்பூசி வந்தது- மாற்றுத்திறனாளிகளுக்கு செலுத்த நடவடிக்கை
கொரோனா தடுப்பூசி முகாமில் கக்குச்சி, தாவணெ, கெரடாமட்டம், ஓட்டுப்பட்டரை ஆகிய பகுதிகளில் உள்ள 158 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாமல் இருந்தது. இதனால் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் மையங்கள் வெறிச்சோடியது. ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி இல்லை என்று போர்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து நீலகிரிக்கு 7,600 கொரோனா தடுப்பூசி வரவழைக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஊட்டி அருகே தாவணெ பகுதியில் நடைபெற்றது.
இந்த முகாமில் கக்குச்சி, தாவணெ, கெரடாமட்டம், ஓட்டுப்பட்டரை ஆகிய பகுதிகளில் உள்ள 158 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து தடுப்பூசி செலுத்த முடியாததால், அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து மருந்தகங்களில் பணிபுரிபவர்கள், காய்கறிகள் வினியோகம் செய்பவர்கள், மின் ஊழியர்கள், டிரைவர்கள் என 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாமல் இருந்தது. இதனால் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் மையங்கள் வெறிச்சோடியது. ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி இல்லை என்று போர்டு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து நீலகிரிக்கு 7,600 கொரோனா தடுப்பூசி வரவழைக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஊட்டி அருகே தாவணெ பகுதியில் நடைபெற்றது.
இந்த முகாமில் கக்குச்சி, தாவணெ, கெரடாமட்டம், ஓட்டுப்பட்டரை ஆகிய பகுதிகளில் உள்ள 158 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து தடுப்பூசி செலுத்த முடியாததால், அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து மருந்தகங்களில் பணிபுரிபவர்கள், காய்கறிகள் வினியோகம் செய்பவர்கள், மின் ஊழியர்கள், டிரைவர்கள் என 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.