செய்திகள்
அதிக கூட்டம் கூடுவதற்கு அனுமதித்த 3 கடைகளுக்கு சீல்
வி.சி.டி.வி. சாலையில் உள்ள ஒரு மளிகைக்கடை, வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள ஒரு பழக்கடை, கொங்கலம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு எண்ணெய் கடை ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
இன்று முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் நேற்றைய தினம் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. பொதுமக்களும் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றதால், பெரும்பாலான கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார்கள். இதில் வி.சி.டி.வி. சாலையில் உள்ள ஒரு மளிகைக்கடை, வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள ஒரு பழக்கடை, கொங்கலம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு எண்ணெய் கடை ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றார்கள். இதையடுத்து அந்த 3 கடைகளுக்கும் சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இன்று முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் நேற்றைய தினம் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. பொதுமக்களும் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றதால், பெரும்பாலான கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினார்கள். இதில் வி.சி.டி.வி. சாலையில் உள்ள ஒரு மளிகைக்கடை, வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள ஒரு பழக்கடை, கொங்கலம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு எண்ணெய் கடை ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றார்கள். இதையடுத்து அந்த 3 கடைகளுக்கும் சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.