செய்திகள்
வாகன சோதனை

காவேரிப்பட்டணத்தில் போலீசார் வாகன சோதனை

Published On 2021-05-22 16:31 IST   |   Update On 2021-05-22 16:31:00 IST
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம்:

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். காலை 10 மணிக்கு மேல் காவேரிப்பட்டணத்தில் சேலம் மெயின் ரோடு, பனகல் தெரு, கோவிந்த செட்டி தெரு அவற்றை இணைக்கும் சாலைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து அத்தியாவசிய தேவை இன்றி சுற்றி திரிந்தவர்களை நிறுத்தி அபராதம் விதிக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி, மகாதேவன் மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News