செய்திகள்
சூளகிரி அருகே விபத்தில் ஒருவர் பலி
சூளகிரி அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து நல்லகானகொத்தப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராமர் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.