செய்திகள்
மரணம்

சூளகிரியில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலி

Published On 2021-05-21 10:11 GMT   |   Update On 2021-05-21 10:11 GMT
சூளகிரியில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

சூளகிரி கமலா காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 55). கூலித் தொழிலாளி. உடல்நலக்குறைவால் இருந்த அவர் சம்பவத்தன்று சூளகிரி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News