செய்திகள்
தற்கொலை

சூளகிரி அருகே வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2021-05-19 17:00 IST   |   Update On 2021-05-19 17:00:00 IST
சூளகிரி அருகே வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏனுசோனை இந்திரா நகரை சேர்ந்தவர் சாமுண்டி (வயது 35). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால் மனமுடைந்த சாமுண்டி விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சாமுண்டி இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூளகிரி வாணியர் தெருவை சேர்ந்தவர் அருண் (21). பெயிண்டர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அருண் தனது தந்தை சஞ்சீவனிடம் பணம் கேட்டார். அப்போது அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த அருண் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News