செய்திகள்
கைது

அரியலூர் அருகே மது விற்ற பெண் கைது

Published On 2021-05-19 16:34 IST   |   Update On 2021-05-19 16:34:00 IST
அரியலூர் அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோரைக்குழி தெற்கு தெருவைச் சேர்ந்த அம்பிகா (வயது 42) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து அம்பிகாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News