செய்திகள்
கொரோனாவுக்கு முதியவர் பலி - புதிதாக 765 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 765 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் கர்நாடகா, சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து பரங்கிப்பேட்டை, புவனகிரி, கடலூர், கீரப்பாளையம், குமராட்சி, மங்களூர், நல்லூர், அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் ஆகிய இடங்களுக்கு வந்த 20 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கும் பாதிப்பு உறுதியானது.
இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 161 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 583 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 890 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றிருந்தனர். நேற்று ஒரே நாளில் 563 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் வரை 399 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். நேற்று மேலும் ஒருவர் பலியானார்.
அதன் விவரம் வருமாறு:-
நெய்வேலி என்.எல்.சி. பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 400 ஆக உயர்ந்தது. கொரோனா பாதித்த 4036 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 941 வெளி மாவட்ட தனியார், அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 65 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 38 ஆயிரத்து 65 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 765 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் கர்நாடகா, சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து பரங்கிப்பேட்டை, புவனகிரி, கடலூர், கீரப்பாளையம், குமராட்சி, மங்களூர், நல்லூர், அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் ஆகிய இடங்களுக்கு வந்த 20 பேருக்கும், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கும் பாதிப்பு உறுதியானது.
இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 161 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 583 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 32 ஆயிரத்து 890 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றிருந்தனர். நேற்று ஒரே நாளில் 563 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நேற்று முன்தினம் வரை 399 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். நேற்று மேலும் ஒருவர் பலியானார்.
அதன் விவரம் வருமாறு:-
நெய்வேலி என்.எல்.சி. பகுதியை சேர்ந்த 73 வயது முதியவர் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ் நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 400 ஆக உயர்ந்தது. கொரோனா பாதித்த 4036 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 941 வெளி மாவட்ட தனியார், அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 65 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன.