செய்திகள்
கே.வி.குப்பம் பகுதியில் ஊரடங்கை மீறிய 33 பேருக்கு அபராதம்
முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள், ஊரடங்கை மீறி இரு சக்கரவாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் என மொத்தம் 33 பேருக்கு போலீசாா் அபராதம் விதித்தனர்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் பகுதியில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறதா? என கே.வி.குப்பம் பஸ் நிலையம், சந்தைமேடு, வடுகந்தாங்கல் ஆகிய பகுதிகளில் கே.வி.குப்பம் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள், ஊரடங்கை மீறி இரு சக்கரவாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் என மொத்தம் 33 பேருக்கு போலீசாா் அபராதம் விதித்தனர்.