செய்திகள்
கைது

விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 பெண்கள் கைது

Published On 2021-05-17 11:15 GMT   |   Update On 2021-05-17 11:15 GMT
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அப்பகுதியில் உள்ள மாதவி (வயது 36) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கீழநத்தம் மெயின் ரோட்டை சேர்ந்த தேவகி (55) என்பவரது வீட்டில் சோதனை செய்து, வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மாதவி, தேவகி ஆகியோா் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News