செய்திகள்
கோப்புப்படம்

அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 6 பேர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-05-16 18:14 GMT   |   Update On 2021-05-16 18:14 GMT
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 7,358 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர்:

அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 254 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 7,358 ஆக உயர்ந்துள்ளது. இதில் 55 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 34, 37, 52, 58, 74 வயதுடைய 5 ஆண்களும், 84 வயதுடைய மூதாட்டி ஒருவரும் என மொத்தம் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 6,080 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,217 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News