செய்திகள்
விபத்து பலி

சூளகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2021-05-16 09:57 GMT   |   Update On 2021-05-16 09:57 GMT
சூளகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

சூளகிரி தாலுகா பெரியமோதுகானப்பள்ளியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 43). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஸ்கூட்டரில் சூளகிரி- கும்பளம் சாலையில் தொட்டி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த சசிக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சசிக்குமார் இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News