செய்திகள்
தற்கொலை

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

Published On 2021-05-13 10:15 GMT   |   Update On 2021-05-13 10:15 GMT
திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

காரைக்குடி வைரவபுரம் நேரு நகரை சேர்ந்தவர் ஆதப்பன்(வயது 34). டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவரது தாய், தந்தையர் இறந்து விட்டனர். அதன்பின் சகோதரர் வீட்டில் ஆதப்பன் இருந்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவருக்கு திருமணம் செய்து வைக்க பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் திருமணம் முடிவாக இல்லை.

இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியாக காணப்பட்ட ஆதப்பன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News