செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

Published On 2021-05-11 11:39 GMT   |   Update On 2021-05-11 11:39 GMT
பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அம்மனேரி காந்தி மைதானம் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய செம்படமுத்தூரை சேர்ந்த அப்பு (வயது 26), கந்தசாமி (51) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஓசூர் சிப்காட் போலீசார் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆர். நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சூதாடிய மூக்கண்டப்பள்ளி ராமராஜன் (31), தனசேகரன் (32), வெங்கடாசலம் (57), பென்னாகரம் அகிலன் (30), தளி கோவிந்தன் (33) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல பாகலூர் போலீசார் மாரசந்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சூதாடிய நல்லூர் முரளி (35), மாரசந்திரம் சிவராமன் (27), அந்திவாடி சுதாகர் (26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News