செய்திகள்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள்

Published On 2021-05-11 10:05 GMT   |   Update On 2021-05-11 10:05 GMT
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதை அடுத்து கொரோனா நோயாளிகள் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் பெரும் பாதிப்பையும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 85 ஆயிரத்து 631 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 72 ஆக உயர்ந்தது. இதில் 12 ஆயிரத்து 978 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதை அடுத்து கொரோனா நோயாளிகள் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் மொத்தம் உள்ள 480 படுக்கைகளில் 325 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. நேற்றிரவு ஆக்சிஜன் வசதியுள்ள 325 படுக்கைகளும் நிரம்பிவிட்டன.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நோயாளிகள் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நோயாளிகள் மருத்துவமனையின் வாயிலிலும் மரத்தடிகளிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News