செய்திகள்
நல்லம்பள்ளி அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
நல்லம்பள்ளி அருகே ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள முண்டாசு புறவடை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 30). விவசாயி. இவர் தனது வீட்டருகே ஒரு ஆட்டை கட்டி வைத்திருந்தார். சம்பவத்தன்று, மர்ம நபர்கள் அந்த ஆட்டை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சின்னசாமி அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தர்மபுரி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஹரிகாரன் (20), காந்தி நகரை சேர்ந்த பிரகாஷ் (20) ஆகிய 2 பேரும் ஆட்டை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ஆட்டை மீட்டு சின்னசாமியிடம் ஒப்படைத்தனர்.