செய்திகள்
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை கடந்தி வந்து வீரன் கோவில் மற்றும் அக்கரகடம்பனூர் அருகே விற்பது தெரியவந்தது.
இதையடுத்து சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த செல்வவிநாயகம் (வயது 42), ராஜேஷ்(29) ஆகிய இருவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். இவர்களிடமிருந்து 220 லிட்டர் சாராயம் கைப்பற்றினர். மேலும் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.