செய்திகள்
நாகை மாவட்டத்தில் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் 3 பேர் கைது
நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் தொடர்பாக தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகப்பட்டினம்:
மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அய்யர் தனபால் (வயது 58) குற்றம் புரிந்தான்இருப்பு. மொட்டை முருகன் என்கிற முருகையன் (47) எரும்புகன்னி, ராதாமங்கலம். தேவேந்திரன் (56), சிவன் கோவில் தெரு கோவில் கடம்பனூர். ஆகியோர் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது
இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா. பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர். கைது செய்ய உத்தரவிட்டார் அதன்படி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 3 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.