செய்திகள்
விபத்து பலி

பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்- கட்டிட தொழிலாளி பலி

Published On 2021-05-04 17:20 IST   |   Update On 2021-05-04 17:20:00 IST
ஊரணி அருகே விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:

புதுக்கோட்டை மாவட்டம் ராஜாளிப்பட்டி அருகே உள்ள குளவாய்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). கட்டிடத் தொழிலாளியான இவர் நேற்று மாலை மணப்பாறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். உசிலை ஊரணி அருகே சென்றபோது எதிரே மணப்பாறையில் இருந்து மேலத்தானியம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News