செய்திகள்
கொரோனா வைரஸ்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மேலும் 225 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-30 12:27 GMT   |   Update On 2021-04-30 12:27 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 225 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 225 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் திருவண்ணாமலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 ஆயிரத்து 246 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 2054 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News