செய்திகள்
சீனக்கொல்லியில் வனப்பகுதியில் காட்டுத்தீ
கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே சீனக்கொல்லி பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் திடீரென காட்டுத்தீ பரவியது.
கூடலூர்:
கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே சீனக்கொல்லி பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் திடீரென காட்டுத்தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனத்துறையினர் விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதியில் காட்டுத்தீ பரவியதால் உடனடியாக வனத்துறையினரால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் பல கட்டமாக நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான புல்வெளிகள் தீயில் கருகியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டுத்தீயால் வன உயிரினங்கள் இறந்து விடுகிறது. மேலும் அரிய வகை தாவரங்கள், மரங்கள் வளராமல் காய்ந்து விடுகிறது. எனவே காட்டுத்தீ பரவாமல் தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.