செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் 850 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-04-25 18:04 IST   |   Update On 2021-04-25 18:04:00 IST
பஸ்களில் இருக்கைகள், பயணிகள் அடிக்கடி தொடும் கைப்பிடிகள், கண்ணாடிகள் போன்றவை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது.
ஊட்டி:

கொரோனா பரவாமல் இருக்க அரசு பஸ்களில் பயணிகள் நின்று பயணம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. எனினும் கிராமப்புறங்கள், வெளியிடங்களுக்கு இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதையடுத்து அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நீலகிரியில் கண்டக்டர்கள், டிரைவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் 1000 பேர் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இதில் இதுவரை 850 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. பஸ்சில் டிரைவர்கள், கண்டக்டர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பஸ்களில் இருக்கைகள், பயணிகள் அடிக்கடி தொடும் கைப்பிடிகள், கண்ணாடிகள் போன்றவை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது.

Similar News