செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

Published On 2021-04-25 16:42 IST   |   Update On 2021-04-25 16:42:00 IST
கந்தர்வகோட்டை கடைவீதியில் வர்த்தகர்கள் சங்கமும், காவல்துறை இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை கடைவீதியில் வர்த்தகர்கள் சங்கமும், காவல்துறை இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமை தாங்கினார். வர்த்தகர் நல சங்க தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான வர்த்தகர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில், அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், கடைகளின் முன்பு கூட்டமாக கூடக் கூடாது. என அறிவுறுத்தப்பட்டது.

Similar News