செய்திகள்
அன்னவாசலில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து முககவசம் வழங்கினர்.
அன்னவாசல்:
அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து முககவசம் வழங்கினர். மேலும் வெளியிடங்களில் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும் என அறிவுறுத்தினர்.