செய்திகள்
திருட்டு

மின்சாதன பொருட்கள் திருட்டு

Published On 2021-04-24 11:12 GMT   |   Update On 2021-04-24 11:12 GMT
மின்சாதன பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:

திருமயம் பஸ் நிலையத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்குள்ள மின் மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர்த்தேக்கத் தொட்டிக்கான மின்மோட்டார் அறை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த அறையின் பூட்டை உடைத்து மின்சாதன பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து திருமயம் ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர், திருமயம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News