செய்திகள்
புதுச்சேரியில் ஒரே நாளில் 987 பேருக்கு தொற்று
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 50 ஆயிரத்து 580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் 987 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதாவது இதுவரை 50 ஆயிரத்து 580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 726 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வருகிற 26-ந்தேதி முதல் சாராயம், கள், மதுபான கடைகள், பார்கள் உள்ளிட்ட மது விற்பனை நிலையங்கள் அனைத்தும் மதியம் 2 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.