செய்திகள்
மாயம்

போளூர் அருகே இளம்பெண் மாயம்

Published On 2021-04-20 17:27 GMT   |   Update On 2021-04-20 17:27 GMT
போளூர் அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
போளூர்:

போளூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் விவசாயி ஒருவரின் 21 வயது மதிக்கத்தக்க மகள் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரை, 15-ந்தேதியில் இருந்து காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை போளூர் போலீசில் நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்.
Tags:    

Similar News