செய்திகள்
ஆரணி அரசு மருத்துவமனையில் இதுவரை 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஆரணி அரசு மருத்துவமனையில் இதுவரை 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆரணி:
நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி ஆகியோர் உத்தரவின்பேரில் ஆரணி அரசு மருத்துவமனையில் இதுவரை 3,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு ஏற்பாடு செய்து, தற்போது 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், என மருத்துவ அலுவலர் டாக்டர் மம்தா தெரிவித்துள்ளார்.