செய்திகள்
புதுச்சேரியில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு
புதுச்சேரியில் நாளை (ஏப். 20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
தமிழகத்தில் நாளை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், புதுச்சேரியிலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாள் தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிப்பதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், புதுச்சேரியில் நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.