செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தேனிமலை போக்குவரத்துக்கழக பணிமனையில் 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-04-18 13:23 GMT   |   Update On 2021-04-18 13:23 GMT
தேனிமலை போக்குவரத்துக்கழக பணிமனையில் பணியாற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை அடுத்த தேனிமலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண்:1 மற்றும் எண்:2-ல் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

பணிமனையில் 620 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். துரிஞ்சாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜா தலைமையில் டாக்டர்கள் முல்லைவேந்தன், தாமரைஅரசி, சவிதா, சுகாதார ஆய்வாளர்கள் அரிகிருஷ்ணன், பரணி மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் பணிமனையில் பணியாற்றும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளர் துரை, கோதண்டராமன் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News