செய்திகள்
கைது

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்- பெண் கைது

Published On 2021-04-16 23:26 GMT   |   Update On 2021-04-16 23:26 GMT
புதுவையில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ரெயின்போ நகரில் ஒரு வீட்டுக்கு அடிக்கடி வெளியாட்கள் வந்து சென்றனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை மற்றும் பெரியகடை போலீசார் அங்கு அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.

இதில் ரெயின்போ நகர் 9-வது குறுக்குத்தெருவில் சுமதி (வயது43) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து விபசார தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை முதலில் உறுதி செய்த போலீசார், அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த நடுத்தர வயது பெண்ணை மீட்டனர்.

தொடர்ந்து விசாரித்ததில், அந்த பெண்ணை வைத்து சுமதி விபசாரம் செய்து வந்ததும் அதற்காக தான் வெளியாட்கள் அங்கு வந்து சென்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக புரோக்கராக செயல்பட்ட சுமதியை கைது செய்து ரூ.12,300-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News