செய்திகள்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வருகிற 19-ந்தேதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற இருந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற இருந்தது. தற்போது அவை ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.