செய்திகள்
கோப்பு படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா உறுதி

Published On 2021-04-15 12:19 GMT   |   Update On 2021-04-15 12:19 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 78 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 78 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 19 ஆயிரத்து 577 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 575 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 288 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Tags:    

Similar News