செய்திகள்
தற்கொலை

ஆரணியில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2021-04-10 14:41 GMT   |   Update On 2021-04-10 14:41 GMT
ஆரணியில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி:

ஆரணி அருணகிரி சத்திரம் கல்யாணசுந்தரனார் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42). பட்டு நெசவு தொழிலாளி. இவர் ஆரணியில் மில்லர்ஸ் ரோட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் வார வட்டிக்கு வாங்கி உள்ளார். அதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரிடமும் வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று காலை பணம் கொடுத்த இருவரும் சிவகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சிவகுமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சிவகுமாரின் மனைவி பார்வதி ஆரணி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News