செய்திகள்
தற்கொலை

திருவண்ணாமலையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-04-08 10:04 GMT   |   Update On 2021-04-08 10:04 GMT
திருவண்ணாமலையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை சாமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனு (வயது 36), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (30). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சீனு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News