செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகுபர் அலி (வயது 32), முகமது (40) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பதற்றமாகவும், பரபரப்பாகவும் காணப்பட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர்களின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
2 பேரிடம் இருந்தும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த சகுபர் அலி (வயது 32), முகமது (40) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பதற்றமாகவும், பரபரப்பாகவும் காணப்பட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.
ஆனால் அதில் எதுவும் இல்லை. பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர்களின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
2 பேரிடம் இருந்தும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.