செய்திகள்
பாஜக வேட்பாளர் நமசிவாயம்

புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமசிவாயத்திற்கு கொரோனா தொற்று

Published On 2021-04-03 19:33 GMT   |   Update On 2021-04-03 19:34 GMT
புதுச்சேரியில் மண்ணடிபேட்டை பா.ஜ.க. வேட்பாளர் நமசிவாயம் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வரும் 6-ம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும்.  தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

அரசியல் கட்சிகளும் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட பிரசார பணிகளில் ஈடுபட்டன. தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தேர்தல் ஆணையமும் செயல்பட்டு வருகிறது. இதற்காக கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் பா.ஜ.க. சார்பில் மண்ணடிபேட்டை தொகுதியில் போட்டியிடும் முன்னாள் மந்திரியான வேட்பாளர் நமசிவாயம் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனை முன்னிட்டு அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.  அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
Tags:    

Similar News