செய்திகள்
கொரோனா பரிசோதனை

கொள்ளிடம் சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை

Published On 2021-03-30 16:25 IST   |   Update On 2021-03-30 16:25:00 IST
கொள்ளிடம் சோதனைச் சாவடியில் திடீரென நடத்திய கொரோனோ பரிசோதனை முகாமில் நூற்றுக்கும்பட்டவர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வழியாக வருபவர்களுக்கும், வேளாங்கண்ணி பாதயாத்திரை செல்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சண்முக சுந்தரம் அறிவுறுத்தலின்படி, வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் மருத்துவர்கள் சத்யா, சிவனேசன், மருந்தாளுனர் நிஷாந்தி, ஆய்வக நுட்பனர் ஜெயா உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் சோதனைச்சாவடியை கடந்து வருகின்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதயாத்திரை வரும் பக்தர்கள் உள்ளிட்டவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது அங்கு வருபவர்களிடம் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். தவறினால் அபராதம் கட்ட நேரிடும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.

கொள்ளிடம் சோதனைச் சாவடியில் திடீரென நடத்திய கொரோனோ பரிசோதனை முகாமில் நூற்றுக்கும்பட்டவர்களுக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளர் கருணாகரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News